Tuesday, December 2, 2014

அதுதான் என்ன?

மெத்தென்றிருக்கும் பஞ்சனையல்ல
சுகமாய் சுகந்தம் வீசும் மலருமல்ல
மனதை மதியை மயக்கும் மதுவுமல்ல
தத்தித் தத்தி நடக்கும் தத்தையுமல்ல
ஒளி வீசி சிறகடிக்கும் மின்மினியுமல்ல
தொடுகையிலே குளிரடிக்கும் பனியுமல்ல
புரியாத அர்த்தமெல்லாம்
புரிய வைக்கும் அகராதியுமல்ல
அதுதான் என்ன?
நினைக்கையிலே நெஞ்சினிக்கும்
சின்னத் தீண்டலிலே சிலிர்க்க வைக்கும்
தாரகைகள் அதிசயிக்கும்
அம்புலியும் ஆசை கொள்ளும்
ஆனந்த மழையை அள்ளித் தரும்
மழலையடா! மழலையடா!!

No comments:

Post a Comment