Tuesday, December 16, 2014

வசந்தம் உன் வசம்!

நிகழ்காலத்தை எரித்து
எதிர் காலத்தை சூனியமாக்கும்
கடந்த கால நினைவுகளை எண்ணி
சுடும் எனத் தெரிந்தும்
நெருப்பில் வீழும் விட்டிலாய்
மீண்டும் மீண்டும் அதிலேயே மூழ்கி
வலிக்கும் எனத் தெரிந்தும்
புண்ணைக் கீறி
வலியில் சுகம் கண்டு
கண்ணீர் சிந்தி மிஞ்சியது
கலைந்த கனவுகளின்
எச்சம் மட்டுமே!
எண்ணமிருந்தும் சிந்திக்க மறுத்து
பார்வை இருந்தும் காண மறுத்து
செயலற்று......
சாதித்தது தான் என்ன?
இலையுதிர் காலம் உண்டென்றால்
வசந்தம் வந்தேத் தீரும்!
கதிரவன் வந்தால்
பனி விலகியேத் தீரும்!
மண்ணில் விழுந்த விதை
விருட்சமாகியேத் தீரும்!
தோல்விகள் இங்கே
விதைக்கப் ப்ட்டிருக்கிறது
வெற்றிகள் வந்தேத் தீரும்!
முயற்சியை விருப்பமாக்கு
புகழ் மாலைகள் வந்தேத் தீரும்!
வாய்ப்புகளை வசமாக்கு
வசந்தம் வந்தேத் தீரும்!
இனி காலம் உன் வசம்!










No comments:

Post a Comment